Home இலங்கை எருக்கலம்பிட்டியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

எருக்கலம்பிட்டியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

by admin

 

மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் காவல்துறைப் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த களஞ்சியசாலையில் 20 ஆயிரம் சங்குகளே களஞ்சியப்படுத்த அனுமதிப்பட்ட நிலையில் 30   ஆயிரத்திற்கும் மேற்பட்ட   சங்குகளும் வளர்ச்சி நிலை அடையாத சங்குகளும் களஞ்சியப் படுத்தியதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் , பணியாளர்கள் இருவர் உள்ளடங்களாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
குறித்த களஞ்சியசாலையில் இருந்து 14,143 சங்குகள், 16 கிலோ கிராம் காய்ந்த அட்டைகள்,700 உயிர் அட்டைகளை  காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சான்று பொருட்களை மன்னார்  காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் சங்கு,அட்டைகள் உட்பட சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More