Home உலகம் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

by admin

 

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடா்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

71 வயதான இம்ரான் கான், 2018 முதல்  022 ஏப்ரல் 2 , வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்துள்ளாா்.  அவர் மீது, அரச ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது

இந்த நிலையில்  குறித்த வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (30) இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பரிசுப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More