Home இலங்கை அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் – ஒருவா் பலி

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் – ஒருவா் பலி

by admin

 

அவிசாவளை மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும் மத்திய நிலையத்தில் இன்று ,செவ்வாய்க்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பில், மஸ்கெலியாவைச் சேர்ந்த  நபரொருவர் உயிாிழந்துள்ளார்.

குறித்த  வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 49 வயதான  நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிாிழந்துள்ளதாக காவல்துறையினா்  தெரிவித்தனர்.

மற்றுமொருவருடன் இணைந்து பழைய இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தொிவிக்கப்பட்டுள்ளது.

உயிாிழந்தவரின் சடலம், அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும், குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு  தொிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More