Home இலங்கை சிலியின்  முன்னாள் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

சிலியின்  முன்னாள் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

by admin

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலியின்  முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார்.

பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று செவ்வாய்க்கிழமை (06.02.24)  3 பேருடன் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More