Home இலங்கை மனோஜ் கமகே பதவி விலகினாா்

மனோஜ் கமகே பதவி விலகினாா்

by admin

 

சட்டத்தரணி மனோஜ் கமகே, தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை   சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று (13) முதல்  தான் இந்தப்  பதவியில் இருந்து விலகுவதாக அந்தக் கடிதத்தில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக சட்டத்தரணியாக பணியாற்றியதாகவும், பணிப்பாளர் என்ற வகையில், நிறுவனத்தில் நிலவிய பல குறைபாடுகளை சீர்செய்வதற்கு உரிய தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும் மனோஜ் கமகே  அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More