Home இலங்கை யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

by admin

 

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்ற  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்   அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை  சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என  தொிவித்துள் தி அமைச்சர்  ஜீவன் தொண்டமான்  அவர்களது  பிரச்சினைகள் குறித்து  கேட்டறிந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறியதாகவும் . அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். எனவும் தொிவித்துள்ளாா்.  43 மீனவர்களில் இருவர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர். ஏனைய 41 மீனவர்களுக்கும் இலங்கை அரசு மூலமாக அல்லது, எம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம் எனவும்  இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புவதாகவும் தொிவித்தாாா்.

மேலும் . இலங்கை காவல்துறையினா் தம்மை நன்றாக நடத்துகின்றனர்  என மீனவர்கள் தெரிவித்ததாகவும்  வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது எனவும் தொிவித்தாா்

தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிப்பதனால்  இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது.  இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளோம் எனவும்  அமைச்சரும்  ஜீவன் தொண்டமான்  குறிப்பிட்டாா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More