Home இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்!

ஒரே பார்வையில் வடபுலச் செய்திகள்!

by admin

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமானது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.

கோப்பாயில் பெண் மீது வாள் வெட்டு ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டாவது நாளாகவும் தொடரும் அகழ்வு பணி!

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் (19.02.24) குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டநிலையில், எதுவும் கிடைக்காத நிலையில் இன்று மீண்டும் அகழ்வு பணிகள் தொடர்கின்றன.

யாழில். விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இராமநாதபுரம் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் – ஐவர் படுகாயம்!
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் 2 தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்ததுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More