Home இலங்கை கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 1994 – 1996 காலப்பகுதிக்குரியவை

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 1994 – 1996 காலப்பகுதிக்குரியவை

by admin

 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளாா்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான குறித்த வழக்கானது   முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (22) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன்    பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்  இதனைத் தொிவித்துள்ளாா்.

ஏற்கெனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான  பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை  மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில், அது தொடர்பில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

பகுப்பாய்வின் அடிப்படையில் இவை 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது ஓர் இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.   எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அநேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட  உள்ளதுஃ

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமையால், மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வைத்தியர்களின் அறிக்கையில்  மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை குறிப்பிடப்படவில்லை எனவும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More