Home இலங்கை சீனாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 

சீனாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 

by admin

 

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு   செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்கள்  ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை சென்றடைந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.

26 வயதான  மலர்மதி ராஜேந்திரன்  மற்றும்  39 வயதான ஜெயக்குமார் தருமராசா  ஆகிய இருவரும்
கடந்த  வருடம் ஜனவரி 30ம் திகதியன்று   மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘மெர்க்ஸ் யூனிகார்ன்’ கப்பலில் ஏற்றப்பட்ட வெற்றுக் கொள்கலனுக்குள்   நுழைந்துள்ளனர்.

எனினும்   கப்பல் மலேசியாவிற்கு சென்றபோது, ​​கொள்கலனில் மறைந்திருந்த  அவா்களை மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேக நபர்களையும்  ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்ற நிலையில்  சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும்   நாடு கடத்த நடவடிக்கையினையடுத்து , இன்று காலை 5.01 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-867) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை  சென்றடைந்த அவா்களை  கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று  கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More