Home இலங்கை யாழில் தம்பதி கடத்தப்பட்டு கணவன் கொலை

யாழில் தம்பதி கடத்தப்பட்டு கணவன் கொலை

by admin

யாழ் – வட்டுக்கோட்டை, பொன்னாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியரை கடத்திச்சென்றவர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கணவரை கொலை செய்துள்ளனர்.

கணவருடன் ஏற்கனவே கருத்து முரண்பாடு கொண்டிருந்த  சிலர் நேற்றிரவு அவா்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை  காரில்   பின்தொடர்ந்துள்ளனர்.

இதனையறிந்து, மோட்டார் சைக்கிளை திருப்பி வேறு திசையில் பயணத்தை தொடர்ந்த போதிலும் காரில் பின்தொடர்ந்து வந்தவர்கள் தம்பதியை மோட்டார் சைக்கிளுடன் கடத்திச்சென்று, மனைவியை யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் இறக்கி விட்டு கணவனை  கூரிய ஆயுதங்களால் தாக்கியதன் பின்ன  கடும் காயங்களுடன் கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு அருகில் கைவிட்டு விட்டு வென்றுளதாக  காவல்துறையினா்    தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  கொல்லப்பட்டவா் வட்டுக்கோட்டை, மாவடியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 24 வயதான வா் ஆவாா்.

இந்த கொலை தொடர்பில் வட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்த நான்கு சந்தேகநபர்களை   காவல்துறையினா் இன்று கைது செய்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றிருக்கலாம் என  தொிவித்துள்ள    காவல்துறையினா்  சந்தேகநபர்கள் நாளை (13) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினா்  முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More