Home இலங்கை அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க  அனுமதி மறுப்பு!

அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க  அனுமதி மறுப்பு!

by admin

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு  அனுமதி அளிப்பதில்லை என இலங்கை  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் எல்லையை பயன்படுத்தாது, எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் ஏனையய வசதிகளை பெறுவதற்காக அமெரிக்க ஆய்வுக் கப்பல் இலங்கைத் தீவுக்குள் பிரவேசிக்க அனுமதி கோரியது.

எவ்வாறாயினும் சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கோரிய போதிலும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிரல் சீன கப்பல்கள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கடுமையாக எழுந்திருந்தன.

அதனால் வெளிநாட்டு  கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதனை இலங்கை அரசாங்கம் ஒருவருடத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More