Home இலங்கை அச்சுவேலியில் தொடரும் தாக்குதல்

அச்சுவேலியில் தொடரும் தாக்குதல்

by admin
யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தால், வீட்டிற்கு பெரியளவிலான சேதங்கள் எதுவும் , ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடத்திய குற்றத்தில் சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார கால பகுதிக்குள் அச்சுவேலி  காவல்  நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள நான்கு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி, முதியவர் ஒருவருக்கு காயமோற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More