Home இலங்கை05 பாகிஸ்தான் பிரஜைகளுக்கு தலா 10 வருடங்கள் சிறை

05 பாகிஸ்தான் பிரஜைகளுக்கு தலா 10 வருடங்கள் சிறை

by admin

 

போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2020 ஜனவரி 1 ஆம் திகதி   காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த  சந்தேகநபர்கள் 614 கிலோ 36 கிராம் ஐஸ் மற்றும் 581 கிலோ  34 கிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை  மேற்கொள்ளப்பட்ட போது, ​​குறித்த  அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More