67
எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் இன்று (03) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் லயன் குடியிருப்பில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் 50 வயதுடைய பெண் ஒருவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love