Home இலங்கை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட பணிகள் தொடர்கின்றன!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட பணிகள் தொடர்கின்றன!

அமெரிக்க தூதரக அதிகாரி கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டார்!

by admin

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் 8ஆவது நாளான நேற்று இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் இலக்கத் தகடு ஒன்றும் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், எட்டாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் நேற்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது மேலும் ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து நேற்று முன்தினம் (11.07.24) மூன்று மனித எச்சங்களும் நேற்று (12.07.24) இரண்டு மனித எச்சங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதரக அதிகாரி கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் (Matthew Hinson) முல்லைத்தீவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு நேற்று  (12.07.2024) பிற்பகல் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன் உள்ளிட்டவர்களும் குறித்த அகழ்வு பணி இடத்தினை பார்வையிட்டு சென்றிருந்தனர்.

இரு கட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடந்த 04.07.2024 அன்று ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக எட்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

மூன்றாம் கட்ட அகழ்வு ஆய்வு பணியின் போது ஏழு மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக 43 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய அகழ்வு ஆய்வின் போது எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து த.வி.பு ஒ-3035 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சன்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More