Home இலங்கை பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

by admin
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான  முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய  பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து நாளைய தினம் புதன்கிழமை வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுடன் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து ஒழுங்குகள்,  முறைப்பாடுகளுக்கான உடனடி நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள்  விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில்  வடமாகாணப் பிரதிக் காவல்துறைமா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்,  யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லு. சூரிய பண்டார, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை உதவி சிரேஷ்ட காவல்துறை  அத்தியட்சகர்கள், காவல்துறைஅதிகாரிகள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள்  பங்குபற்றினார்கள்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More