109
மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (03/03/2025) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த வாள்வெட்டுத் தாக்குதலை 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்தவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே வாள்வெட்டுத் தாக்குதலுக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love