Home இலங்கை கட்டுநாயக்காவில் கடும் மழை – பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

கட்டுநாயக்காவில் கடும் மழை – பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

by admin

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (26.11.24) இரவு பெய்த கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, இந்தியா மற்றும் மாலே, மாலத்தீவில் இருந்து விமானங்களும், அபுதாபியில் இருந்து சென்ற எதிஹாட் ஏர்லைன்ஸ் விமானமும் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

மேலும், ஜப்பானின் நரிடா, டுபாய் மற்றும் இந்தியாவின் சென்னை ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற  03 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More