Home இலங்கை வரணியில் ஐவருக்கு மர்ம காய்ச்சல்

வரணியில் ஐவருக்கு மர்ம காய்ச்சல்

by admin

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் 07 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலருக்கு எலிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரணி பகுதியில் உள்ள ஒரு குறிச்சியை சேர்ந்த ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் ஒருவருக்கு நிலைமை மோசமாகியதால் , அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More