முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பிரஜைகளுடன் படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. மியன்மாரிலிருந்து 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 பயணிகளுடன் புறப்பட்ட படகே இவ்வாறு திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது.
இவ்வாதறு கரையொதுங்கிய படகிலிருந்தவா்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மீனவர்கள், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சுகயீனமுற்ற நிலையிலும் காணப்படும் நிலையில் அவா்களுக்கான உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியுள்ளர்.