உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரு சாத்தியமான வர்த்தகப் போருக்குத் தயாராகி வருவதால், பரஸ்பர கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து டிரம்ப் விவாதிப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புடினுடன் தான் பேச்சுநடத்தப்போவதாக டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திக் கூறியதன் பின்னர், உக்ரேனியப் போரை முடிவிற்குக்கொண்டுவர எடுக்கும் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடப்போவதாக உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனவே, டிரம்பின் வருகையுடன் உலக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தேற வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

