கும்பமேளா செல்வதற்காக டெல்லி தொடருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட ப சன நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் தொடருந்துகளில் ஏறப் பயணிகள் முண்டியடித்ததால் இவ்வாறு சன நெரிசல் ஏற்பட்டுள்ளது இரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நெரிசலில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி தொடருந்து நிலையத்தில் மீட்புப் பணிகளுக்காகத் தீ அணைப்பு வீரர்கள் சென்றுள்ளனர்.
விடுமுறை தினத்தில் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 29 ஆம் திகதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி தொடருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.