Home இலங்கை மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் சந்தேகநபர் கைது

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் சந்தேகநபர் கைது

by editorenglish

மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாதோரால், இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.  இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன், இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மித்தெனிய காவல்துறையினர் மற்றும் தங்காலை குற்றவியல் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் காவல்துறைச் சேர்ந்தவர் ஒருவரும் முன்னாள் இராணுவ உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More