இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் தென் கடல் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை நேற்று வியாழக்கிழமை (6) இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் குறித்த மீனவர்களை உடனடியாக தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) காலை குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

