Home இலங்கை பெண் வைத்தியா் பாலியல் வன்புணர்வு – சந்தேக நபர் கைது

பெண் வைத்தியா் பாலியல் வன்புணர்வு – சந்தேக நபர் கைது

by admin

 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியா் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனவும்  அவர் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும்  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (10) இரவு  பயிற்சி பெற்று வந்த 32 வயது மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபரை  கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து திருடிய அலைபேசியைப் பயன்படுத்தி  அவரைக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்திற்கு முந்தைய நாள் போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More