Home இலங்கை தேசபந்து தென்னகோன் குற்றவியல் வலையமைப்பை இயக்கினாரா?

தேசபந்து தென்னகோன் குற்றவியல் வலையமைப்பை இயக்கினாரா?

by editorenglish

தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். தென்னகோனின் கைது நடவடிக்கையை நிறுத்தக் கோரிய மனுவை விசாரித்தபோது,

​​கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளைப் பயன்படுத்தி வெலிகமவில் உள்ள விடுதி மீது தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டதாகக் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கூறினார்.

ஒரு காவற்துறை சார்ஜென்ட் மரணத்திற்கு வழிவகுத்த இந்த சம்பவம், தென்னகோனுக்கும் விடுதி உரிமையாளருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுடன் தொடர்புடையது என்று பீரிஸ் கூறினார்.

தென்னகோன் தனிப்பட்ட மோதல்களைத் தீர்க்க காவல்துறையின‌ரை “துணை இராணுவப் படையாக” பயன்படுத்தியதாக பீரிஸ் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More