Home இலங்கை சமிக்ஞை   கட்டமைப்பை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது   துப்பாக்கி சூடு-இருவர் கைது.

சமிக்ஞை   கட்டமைப்பை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது   துப்பாக்கி சூடு-இருவர் கைது.

by admin
மன்னார் அடம்பன்   காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல்   ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை  கடமையில் ஈடுபட்ட அடம்பன்  காவல்துறையினர்   இடை மறித்த போது  காவல்துறையினரின் சமிக்ஞை கட்டமைப்பை மீறி காவல்துறையினா்  மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது   குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி காவல்துறையினா்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை    இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து  போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்ட போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் காவல்துறையினா் தெரிவித்தனர்.
மேலும் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்  ஆகியோா்  கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ,மீட்கப்பட்ட பொருட்களும்  காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலதிக விசாரணைகளை அடம்பன்  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More