நேற்றிரவு (22.04.25) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவிததுள்ளது நேற்றிரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறை யினர் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கைத்துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் எனத் தொிவித்துள்ள வெல்லம்பிட்டிய காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.