Home இலங்கை சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மற்றும் டெங்கு பரவும் சூழலை பேணியவா்களுக்கு தண்டம்

சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மற்றும் டெங்கு பரவும் சூழலை பேணியவா்களுக்கு தண்டம்

by admin
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்  அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்குநேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால்,  25ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, கையில் வெட்டுக்காயங்களுடன் உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் உணவினை கையாண்டமை, போன்ற குற்றச்சாட்டுகளிற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது  குறித்த வழக்கில் கடை உரிமையாளரை குற்றவாளியாக கண்ட மன்று  25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
இதேவேளை வல்வெட்டித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடியவாறு சூழலை வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குடியிருப்புகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கள தரிசிப்புக்களுக்கு சென்ற வேளை டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய மூன்று குடியிருப்பாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை மூன்று குடியிருப்பாளர்களுக்கும் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More