Home இலங்கை சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது

சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை  காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர்.  தாம் பணம் பெற்றுக்கொண்ட போதிலும் , சிறுமிக்கு பணம் கொடுக்காது இனிப்பு பண்டங்களை மாத்திரம் வழங்கியுள்ளனர்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி , தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்தமையை அடுத்து , வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களை  காவல் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினா் , சிறுமியை  துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய ஏனைய ஆண்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More