Home இலங்கை பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியது!

யாழில். கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

by admin

 

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகரை சேர்ந்த திருச்செந்தில் சரோஜாதேவி (வயது 58) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (04.05.25)  வாளியினால் நீர் அள்ளி நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.

அவரை வீட்டார் மீட்டு ,வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (04.05.25) கரையொதுங்கியுள்ளது. தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் காவற்துறையினரால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், பிள்ளையுடன் அவர் தும்பளை பகுதியில் வசித்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More