Home இலங்கை யாழில் 56.6 % வாக்குகளும் மன்னாாில் 70.15% வாக்குகளும் பதிவு

யாழில் 56.6 % வாக்குகளும் மன்னாாில் 70.15% வாக்குகளும் பதிவு

by admin
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது. அதன் போது, 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினருக்கு 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிட்டனர்.

மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில்   எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றிருப்பதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார் மாவட்ட செயலகத்தில் இன்று (6) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னர் மாவட்டத்தில் 88 உறுப்பினர்களை தெரிவு செய்ய 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.இந்த நிலையில் இன்று (6)மாலை வரை 64 ஆயிரத்து 904 வாக்காளர்கள் வாக்களித்திருக்கின்றனர்.அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முழுமையான வாக்குப்பதிவு 70.15%  காணப்படுகின்றது.
மன்னார் நகர சபைக்கு 10,975 வாக்குகளும் ,மன்னார் பிரதேச சபைக்கு 16,939 வாக்குகளும், நானாட்டான்  பிரதேச சபைக்கு 12,343 வாக்குகளும், முசலி பிரதேச சபைக்கு 10,819 வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 13,636 வாக்களும் அளிக்கப்பட்டுள்ளது.
 மாலை 4:30 மணி அளவில் அனைத்து வாக்களிப மன்னார்  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் என்னும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வட்டார ரீதியில் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து தேர்தல் வாக்களிப்பு விபரங்கள் அறிவிக்கப்படும். முழுமையான  வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட செயலும் ஊடாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More