மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வான் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீதே குறித்த வான் மோதியதனால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததா வானில் பயணித்தவா்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர். R