Home இலக்கியம் பூமியை விழுங்கும் பூதங்கள் புதியன?! சி. ஜெயசங்கர்.

பூமியை விழுங்கும் பூதங்கள் புதியன?! சி. ஜெயசங்கர்.

by admin

 

 சிந்திக்க எதுவும் தேவையில்லை
சிரமம் எமக்கு எதுவுமில்லை
‘அப்’ பைப் பார்த்து போகுதையே வழிபோகுதையே
அடையாளம் பார்த்து போகும் வழிபோய்
ஆளைக் கேட்டும் போகும் வழிபோய்
‘அப்’பை பார்த்து போகுதையே வழிபோகுதையே
வழியை கேட்பவர் எவரும் இல்லை
வழியை காட்டும் தேவையில்லை
போகுதையே வழி போகுதையே
இயக்குகிறார் அவர் எங்கிருந்தோ
இறைவரும் இல்லை மனிதரும் இல்லை
உயிர்கள் எவையும் பண்டங்களன்றிப்
பெறுமதி அவருக்கு எதுவுமில்லை வேறு எதுவுமில்லை
மனிதரை விழுங்கும் பூதங்கள் அவர்கள்
புராணத்தில் இல்லை புனைவினில் இல்லை
மனித உருவத்தில் மாண்புறு உடைகளில்
உண்மையில் உண்மையாய்
எங்கும் அவர்களே தெரிகின்றார்
எதிலும் அவர்களே தெரிகின்றார்
பூமியை நரகம் செய்கின்றார் -அவர்
சொர்க்கத்தை ஆக்கித் திளைக்கின்றார்
அண்டவெளிக்கும் சென்று வருகின்றார்
ஆகாய கங்கையை படைக்க என்கிறார்
கூலிக்கு மூளையை வாங்கி அவர்
இயந்திர மூளையை படைக்கின்றார்
சொந்தப் புத்தியை சிதையச் செய்து
செயற்கை புத்தியை திணிக்கின்றார்
பூமியை விழுங்கும் புதிய பூதங்கள்
புராணத்தில் இல்லை புனைவினில் இல்லை
மாண்புறு உடைகளில் மனித உருவத்தில்
உண்மையில் உண்மையாய்
எங்கும் அவர்களே தெரிகின்றார்
எதிலும் அவர்களே தெரிகின்றார்
எப்படி அவர்கள் வளர்ந்தனரோ?
எதனையும் அழிக்கத் துணிந்தனரோ?
உலகம் தமக்கு மட்டுமின்றி
எவருக்கும் இல்லை என்னும் அவர்
எப்படி வந்து வளர்ந்தனரோ?
எதனையும் செய்யத் துணிந்தனரோ?
அறிந்து வளர்ந்து வாழ்வு கொள்வோம்
அறிந்து வளர்ந்து வாழ்வு கொள்வோம்.
‘அப்’ – செயலி
சி. ஜெயசங்கர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More