Home இலங்கைகடுவெல நீதவான் நீதிமன்ற அலுவலக அறைக்கு பூட்டு!

கடுவெல நீதவான் நீதிமன்ற அலுவலக அறைக்கு பூட்டு!

by admin

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலக அறை, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் முத்திரையிடப்பட்டுள்ளதாக கடுவெல காவற்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, முன்னாள் நீதவான் சானிமா விஜயபண்டாரவுக்கு வரும் திங்கட்கிழமை (19.05.25) அன்று நீதிமன்றத்திற்கு வந்து, தனது அலுவலக அறையில் உள்ள தனிப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுவரை, குறித்த அலுவலக அறைக்கு காவற்துறைப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடுவெல காவற்துறையினர் கூறினர்.

சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை முத்திரையிடப்பட்டுள்ளது.

தற்போது, கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More