Home இலங்கைபட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

by admin

 

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(20)  முதன்முறையாக கூடவுள்ளது. சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல, அரச சட்டத்தரணி ஷக்தி ஜாகொட ஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.  பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சிகளினூடாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பது தொடர்பில்  குறித்த  குழு  ஆராய்கின்றது.

.208 பக்கங்களைக் கொண்ட  அறிக்கையை ஆய்வு செய்யும் போது வெளிக்கொணரப்படும் உண்மைகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை உடனடியாக சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்தக் குழு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More