Home இலங்கை அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

by admin

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை நேற்றைய தினம் சனிக்கிழமை  காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.  கிளிநொச்சியில் இருந்து அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் வாகனங்களையும் சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகில் வைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். அதனை அடுத்து அதன் சாரதிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சாரதிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் என்பவற்றை சாவகச்சேரி  காவல்நிலையத்தில் கையளித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More