Home இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் – அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் – அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

by admin

 

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 2 ஆம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷானின் மரணம் தொடா்பான சம்பவமானது  அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்வும்,அது தொடா்பில்  விரிவான விசாரணை நடத்தப்பட்ட  வேண்டும் எனவும் கோரி, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் பகிடிவதையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.  இந்த மனுவானது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகம், அதன் துணைவேந்தர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உயர் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறைமா அதிபர், பதில் காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 69 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More