மனைவியை கொலை செய்ததாக தொிவித்த கணவன் ஒருவா் மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (03) செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம் காவல்நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் எனும் குறித்த நபரை உடனடியாக கைது செய்த காவல்துறையினா் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தினை சின்னபூவரசன்குளத்தில் அமை ந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர்.
அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான, 32 வயதுடைய சுகிர்தரன் சுவர்ணலதா என்ற கர்ப்பிணிப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை எனத் தொிவித்துள்ளனா்.
தனக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்துள்ள நிலையில் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தான் இன்று செவ்வாய்க்கிழமை காலை நொச்சிகுளம் பகுதியிலிருந்து மனைவியை மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் நோக்கி அழைத்துச் சென்று அங்கு வைத்து கொலை செய்ததாக காவல்துறையினாிடம் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.