149
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் ராமேஸ்வரம் கடற்கரையை சென்றடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் தொிவித்ததாகவும் கைது செய்யப்பட்டவா்கள் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தொிவிக்கின்றன.
Spread the love