Home இலங்கைஈரானின்  ஏவுகணை தாக்குதல்களில் இலங்கையா்  இருவர் காயம்

ஈரானின்  ஏவுகணை தாக்குதல்களில் இலங்கையா்  இருவர் காயம்

by admin

 

இஸ்ரேல் முழுவதும் ஈரான்  ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால் இலங்கைப் பெண்கள்  இருவர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நகருக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்ள்ளாா் , அதிகாலை 03:30 மணியளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் போன்று உலுக்கியதை அடுத்து, குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை பேட் யாமில் அதிகாலை 04:00 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தில், மற்றொரு இலங்கைப் பெண்ணின் வலது கையில் கண்ணாடி விழுந்து காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலுக்கான  இலங்கைத் தூதர் நிமல் பண்டார, காயமடைந்தவர்களிடம் நேரில் சென்று பேசியதாக  தொிவிக்கப்பட்டுள்ளதுடன்  இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மேலும் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக தூதரகத்துடன்  தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More