Home இலங்கையாழ். மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்!

யாழ். மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்!

by admin

யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய துணைத் தூதுவர், யாழ் . மாநகர முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதானி விவேகானந்தராஜாவை நேற்றைய தினம் (16.06.25) சந்தித்தார்.

இந்திய்ய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மேலும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பது தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் செயல்படுத்த இருக்கும் எதிர்காலக் திட்டங்கள் தொடர்பில் முதல்வர் தெரிவித்தார். இதனை வரவேற்த்த துணை தூதுவர் யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More