Home இலங்கையாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல்

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல்

by admin

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது மிளகாய் தூள் வீசி , கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (23.06.25)  நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
தனது பிள்ளைகளை பாடசாலையில் இறக்கி விட்டு , மோட்டா சைக்கிளில் ,  வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் மீது கட்டுடை பகுதியில் , பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் மிளகாய் தூளை வீசியுள்ளனர்.
அதனால் , நிலை தடுமாறு விபத்துக்களானவர் மீது கூரிய ஆயுதத்தால் , சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு இரு நபர்களும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் , காணப்பட்டவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறைனர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More