Home உலகம்காசாவில் இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது!

காசாவில் இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது!

by admin

காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் நேற்று (30) கடுமையான தாக்குதலினால் பாதிக்கப்பட்டன.

காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் காசா நகரின் அல்-வஹ்தா வீதிகளில் பாதசாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் வீடுகள் பரவலாக அழிக்கப்படுவது தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன, 18 பகுதிகளை காலி செய்ய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பாடசாலைகள் மீது நேற்று தாக்கப்பட்டன. கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

காசாவில் மட்டும், நேற்று 85 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது, அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் இருந்தவர்கள். காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More