1.2K
வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தாதியர்களை நியமிப்பதன் மூலம் குறித்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நயினாதீவு பிராந்திய மருத்துவமனையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
Spread the love

