Home இலங்கைவீட்டாரை மிரட்ட முற்பட்டவர் தீயில் எரிந்து உயிரிழப்பு

வீட்டாரை மிரட்ட முற்பட்டவர் தீயில் எரிந்து உயிரிழப்பு

by admin

 

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு , தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டிய போது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   நயினாதீவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் , கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி , தனது உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார் அதன் போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியுள்ளது. அதனை அடுத்து வீட்டார் தீயினை அணைத்து, மருத்துவ மனையில் அனுமதித்த நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More