Home இலங்கைகிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

by admin

 

முல்லைத்தீவு மாவட்டம்  மாங்குளம்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு  மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த  தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள    கிணற்றிலிருந்தே  சடலமாக  இன்று வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர்

தாய் உசாகரன் மாலினி( வயது 38)   மகள்களான  உசாகரன் மிக்சா ( வயது 11)   உசாகரன் சதுசா (வயது 04) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த  கிணற்றின் அருகில்  இன்று அதிகாலை கைப்பை ஒன்றும்  ஏனைய  பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊா் மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும்  காவல்துறையினருக்கு   வழங்கிய தகவல்களின்  அடிப்படையில் அங்கு  சென்ற    கிராம அலுவலர் மற்றும்  காவல்துறையினர் கிணற்றில் சடலங்கள் இருப்பதை   பாா்வையிட்டதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள்   மீட்கப்பட்டு  மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று  பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்

இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது  கொல்லப்பட்டனரா என்பது தொடர்பில்  மாங்குளம்  காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More