Home இலங்கைகனடாவில் இருந்து குருநகர் சென்றவர் மரணம் – வீட்டில் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து குருநகர் சென்றவர் மரணம் – வீட்டில் சடலமாக மீட்பு!

by admin

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர்  நேற்றைய (24.07.25) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.  யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கு  தகவல் வழங்கினார். அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.சாட்சிகளை யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கு  நெறிப்படுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More