மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று (29) காலை மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
மாவனெல்ல பகுதியில் தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்தது..
Sep 29, 2025 at 06:48
இலங்கை மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் திங்கட்கிழமை (29) அன்று அதிகாலை சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தற்போது இந்த முயற்சியில் உதவி வருகின்றனர்

