யாழ். வண்ணை வெங்கடேச ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக நவராத்திரி பூஜை – பத்தாம் நாள் பூஜை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இப்பூஜை நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர் கே.சிவகரன், நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான ம. வித்தியானந்தநேசன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்ஷினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி , பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா!
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

